முதலமைச்சர் காமராஜர்

”சுதந்திரம் வந்தால் நாட்டில் மக்கள் நிலை உயரும் என்பதை அறிந்தே பலர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காகவே மகாத்மா காந்தியின் தலைமையில் பலர் ஜெயிலுக்குச் சென்றனர். ஆனால் யாரும் மந்திரியாவதற்கு ஜெயிலுக்குப் போகவில்லை.”

"பதவி என்பது யாருக்கும் சொந்தமானதல்ல. அது என்ன தனி உடைமையா? கிடையவே கிடையாது. மந்திரி பதவி பரம்பரைப் பாத்தியதை அல்ல. மகாராஜாக்கள் பதவி போன்றதும் அல்ல. மக்கள் ஒத்துழைக்கும் வரை மட்டுமே பதவி நீடிக்கும்"




ஒரு கிராமத்துக்குச் சென்றார் முதலமைச்சர் காமராஜர். அந்த ஊர்த் தலைவர்கள் அவரிடம் வந்து, 
”ஐயா! எங்களுக்குச் சுடுகாட்டுக்குச் செல்வதற்குப் பாதை அமைத்துத் தந்திட வேண்டும்” – என்றார்கள்.
காமராஜர் இதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே,
” நான் நீங்களெல்லாம் நன்றாக வாழ்வதற்குப் பாதை தேடுகிறேன். நீங்கள் செத்தவனுக்குப் பாதை கேட்கிறீர்கள்!” என்றார்.
காமராசர் மேடையில் இருக்கும் போதே ஒரு பேச்சாளர், 
”காங்கிரஸ் ஆட்சிக்கு வருமானால், உழுபவனுக்கு நிலம் சொந்தமாகும்” என்று பேசினார்.
அடுத்துப் பேசிய காமராஜர்,
” நடக்கிறதைச் சொல்லணும். நாங்கள் நம்புகிறதைச் சொல்லணும். உழுபவனுக்கு நிலம் சொந்தமாகனுமின்னு சொல்லுறீங்க. சரி… காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், அப்படியே தந்து விடுவதா வச்சுக்குவோம்.
அப்புறம் நெல் அறுக்கிறவன், அறுக்கிறவங்களுக்கே நெல் சொந்தம் என்பான். அதை அரைக்கிறவன், அரைக்கிறவனுக்கே அரிசி சொந்தமின்னு சொல்லுவான்” – என்றார்.
‘உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்று பேசியவரும், ஏன் கேட்டுக் கொண்டு இருந்த பொது மக்களும் அசந்து போனார்கள்.

Share on Google Plus

About Author

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment